திருப்புதல் தேர்விற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !


Please Send Your Materials , Guides and Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929

திருப்புதல் தேர்வை கவனத்துடன் நடத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல். 


     தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 9-ஆம் தேதி தொடங்கவிருக்கும் திருப்புதல் தேர்விற்கான வழிகாட்டு நெறிமுறைகள் கீழே வழங்கப்பட்டுள்ளது. இவை ஏற்கனவே பல மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் பள்ளிக் கல்வித்துறையும் வெளியிடப்பட்டவை ஆகும். இவை ஜனவரி 19ஆம் தேதி திட்டமிட்டிருந்த திருப்புதல் தேர்வுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டவை. மேலும் தற்போது மதுரை போன்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் திருப்புதல் தேர்வு  வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி வருகிறார்கள் அதனையும் கீழே இணைத்துள்ளோம் . ஒரு சில மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் திருப்புதல் தேர்வு அதற்கான வழி காட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது - அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை அறிவுறுத்தல். 
  • திருப்புதல் தேர்வு குறித்த தகவலை முன்கூட்டியே தெரிவித்து, மாணவர்களை தயார்படுத்த வேண்டும். 
  • விடைத்தாளில் பள்ளியின் பெயர் மற்றும் முத்திரை இடம் பெறக்கூடாது. 
  • விடைத்தாளில் தேர்வு எண், வகுப்பு, தேதி, பாடம் மட்டும் இடம் பெற வேண்டும். 
  • பிளஸ் 2 மாணவர்கள் தங்களின் விடைத்தாள்களில், அரசு தேர்வுத்துறை வழங்கியுள்ள நிரந்தர பதிவு எண்ணை, தேர்வு எண்ணாக குறிப்பிட வேண்டும். பத்தாம் வகுப்பு மாணவர்கள், தேர்வு எண்ணாக, 'எமிஸ்' எண்ணின் கடைசி ஐந்து இலக்க எண்களோடு, வரிசை எண்ணையும் சேர்த்து, எட்டு இலக்க எண்களாக எழுத வேண்டும்.
  • தேர்வு அறை ஒன்றுக்கு 20 மாணவர்கள் மட்டுமே அமர வேண்டும். அரசின் நிலையான வழிகாட்டு முறைகளை கடைப்பிடித்து தேர்வுகள் நடத்த வேண்டும்.
  • ஒவ்வொரு தேர்வு நாளிலும், காலை 8:00 மணிக்குள், தங்களின் வினாத்தான் கட்டுக்காப்பு மையத்தில், விளாத்தாள்களை பெற்று, அவற்றை முறையான பாதுகாப்புடன், பள்ளிக்கு எடுத்துச் செல்ல வேண்டும். 
  • விடைத்தாள் கட்டுகளை பள்ளியில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். 
  • மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்கள் ஆய்வுக்கு உட்பட்டவை. மதிப்பெண் பட்டியல், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் இருந்து வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  • விடைத்தாள்களை பள்ளிகளுக்கு இடையில் பரிமாற்றம் செய்வது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் செயல்முறைகளை வெளியிட்டுள்ளனர். 
  • ஒவ்வொரு பாடத்தின் தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்களை அன்றைய தினமே மாவட்ட கல்வி அலுவலர் கூறிய விடைத்தாள் சேகரிப்பு மையத்திற்கு ஒப்படைக்கவும். 
  • மேலும் இதுகுறித்த முழுமையான அறிவிப்பு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வெளியிடப்பட்டுள்ளது அவற்றையும் கீழே வழங்கியுள்ளோம். 

    மேலும் 9ஆம் தேதி நடக்கவிருக்கும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்விற்கான அறிவுரைகளை ஓரிரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வெளியிட்டுள்ளனர் அவற்றைக் கீழே வழங்கியுள்ளோம். 

திருப்புதல் தேர்விற்கான மாதிரி வினாத்தாள்கள்

     10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்விற்கான மாதிரி வினாத்தாள்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது.

        ஆசிரியர்கள் , தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக , எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvikadal.in@gmail.com என்ற Email முகவரிக்கோ அல்லது (Whatsapp , Telegram & Signal) 9385336929 என்ற எண்ணுக்கோ அனுப்பலாம். நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் அனுப்பலாம் . நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள் உங்களின் பெயருடன் பதிவேற்றம் செய்யப்படும் .

Post a Comment

0 Comments