அரசுப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்ற கிளை
தமிழகத்தில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் காரணத்தினால் அந்த பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது. இந்த தற்காலிக ஆசிரியர் பணியிடங்களில் ஏற்கனவே இல்லம் தேடி கல்வியில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆசிரியர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் மற்றும் ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த பணிகள் அனைத்தையும் தலைமை ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளி மேலாண்மை குழுக்களின் மூலம் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் பல மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களில் முறைகேடு நடப்பதாக வந்த புகாரை எடுத்து நேற்றைய தினம் திண்டுக்கல் மற்றும் சில மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டிருந்தனர்.
தற்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆனது அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை மட்டுமே இந்த 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களில் நியமிக்க வேண்டும் என்று சென்னையில் நேற்று ஆசிரியர்கள் மொட்டை அடித்து போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
0 Comments