பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மாதந்தோறும் மாத இதழ்கள் வழங்கப்படும்.
தமிழக பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்கவும் அவர்களின் உள்ளார்ந்த படைப்பு திறன்களை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு ஊஞ்சல் இதழும் உயர் வகுப்பு மாணவர்களுக்கு தென்சிட்டு இதழும் மாதமிருமுறை வெளியிடப்படும் மேலும் ஆசிரியர்களுக்கான படைப்பு தளத்தை உருவாக்கவும் சிறந்த கற்றல் கற்பித்தல் முறைகளை பரிமாறிக்கொள்ளவும் கனவு ஆசிரியர் என்ற மாத இதழ் வெளியிடப்படும் இதற்காக சுமார் 7 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசானை வெளியிட்டுள்ளது.
மேலே குறிப்பிடப்பட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு ஊஞ்சல் இதழும் உயர் வகுப்பு மாணவர்களுக்கு தென் சிட்டு இதழும் மாதம் இருமுறை வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது இந்த இதழ்களில் தேசிய மாநில செய்திகள் மட்டுமன்றி அந்தந்த மாவட்ட செய்திகளும் மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் படைப்புகளும் இடம்பெறும் என்றும் இவ்விதழ்களை வகுப்பறை சூழலுடன் நயம்பட இணைத்து வாசிப்பை பேரியக்கமாக மாற்றும் வண்ணம் பள்ளி வட்டார மாவட்ட மாநில அளவில் கதை கட்டுரை கவிதை ஓவியம் பேச்சு உள்ளிட்ட பல்வேறு படைப்புகளை வெளிக்கொணர போட்டிகளும் மாணவர்களை ஊக்குவிக்க பயிற்சிப் பட்டறைகளும் வல்லுநர்கள் மூலம் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுமட்டுமன்றி ஆசிரியர்களுக்கு என தனித்துவமான படைப்பு தளத்தை உருவாக்கவும் சமகாலத்தில் உலகெங்கிலும் பயன்படுத்தப்படும் சிறந்த கற்றல் கற்பித்தல் முறைகளை பரிமாறிக் கொள்ளவும் புதுமைகளை மாற்று கல்வியியல் சிந்தனைகளையும் ஆசிரியர்களுக்கு அறிமுகம் செய்யவும் தமிழ்நாட்டிலும் தரணியெங்கிலும் உள்ள கனவு ஆசிரியர்கள் குறித்து செய்திகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்கவும் ஆசிரியர்களின் படைப்பாற்றலை போற்றிப் பாராட்டும், அங்கீகரிக்கவும், ஆவணப்படுத்தும், கனவு ஆசிரியர் என்ற மாத இதழில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
சிறார் பருவ இதழ்கள் அனைத்து வகையான அரசு பள்ளிகளிலும் அனைத்து வகுப்பறைகளுக்கும் தலா ஒரு பிரதி வீதம் ஆண்டு விடுமுறை பருவ விடுமுறை நீங்களாக மாதம் இருமுறை என ஒரு கல்வியாண்டிற்கு ஊஞ்சல் மற்றும் தின்சிட்டு இதழ்கள் தலா 20 வழங்கப்படும் மேலும் ஆசிரியர்களுக்காண மாத இதழை ஒவ்வொரு பள்ளி நூலகத்திற்கும் ஒரு கல்வியாண்டிற்கு பத்து இதழ்கள் என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் வாயிலாக அச்சிட்டு நேரடியாக பள்ளிகளுக்கு சென்று சேரும் வகையில் வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்திற்காக 7.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
0 Comments