மாணவர்கள் பொதுத்தேர்வை சந்திக்க தயாராக இருப்பதாக


Please Send Your Materials , Guides and Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929

மாணவர்கள் பொதுத்தேர்வை சந்திக்க தயாராக இருப்பதாக அரசு பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். 


       திருப்புதல் தேர்வு நடத்த அட்டவணை வெளியாகியிருந்த நிலையில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் பொதுத்தேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்து இருக்கிறது இந்த வகையில் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட பாடங்களை நடத்தி முடித்து விட்டதாக தமிழ்நாடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கழக நிர்வாகி குலாம் தஸ்தகீர் தெரிவித்துள்ளார்.

       நான்கு மாதங்கள் பள்ளி தொடர்ந்து நடைபெற்றதால் மாணவர்கள் தங்களுடைய பொதுத்தேர்விற்கு தயாராக இருக்கிறார்கள். மேலும் அரசு ஏற்கனவே 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு திருப்புதல் தேர்வு அறிவித்திருந்தது. அதை நடத்தி முடித்து விட்டால் மாணவர்கள் தங்களுடைய பொதுத்தேர்விற்கு தயாராகி விடுவார்கள் என்று தமிழ்நாடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்  நிர்வாகி  குலாம் தஸ்தகீர் தெரிவித்துள்ளார்.

     முந்தைய கல்வியாண்டுகளில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 3 திருப்புதல் தேர்வு, மேல்நிலை இரண்டாம் ஆண்டு அதாவது பன்னிரண்டாம் (12) வகுப்பு மாணவர்களுக்கு 2 திருப்புதல் தேர்வு நடைபெறும். அதே போன்று இந்த ஆண்டும் இரண்டு திருப்புதல் தேர்வை நடத்தி முடித்து விட்டு, செய்முறை தேர்வை நடத்தினால் அதன் பிறகு மாணவர்கள் தங்களுடைய பொதுத் தேர்வை எதிர் கொள்வதற்கு ஏதுவாக இருக்கும் என்று கூறினார். 



ஆசிரியர்கள் , தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக , எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvikadal.in@gmail.com என்ற Email முகவரிக்கோ அல்லது (Whatsapp , Telegram & Signal) 9385336929 என்ற எண்ணுக்கோ அனுப்பலாம். நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் அனுப்பலாம் . நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள் உங்களின் பெயருடன் பதிவேற்றம் செய்யப்படும் .

Post a Comment

0 Comments