10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் திருப்புதல் தேர்வு


Please Send Your Materials , Guides and Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் திருப்புதல் தேர்வு நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு . 


       தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைத்து வகைப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விடுமுறை நாட்களில் மாணவர்களை முதல் திருப்புதல் தேர்விற்கும் பொதுத் தேர்விற்கும் தயார்படுத்தும் விதமாக ஒரு சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு ஆன்-லைன் வழியில் தேர்வுகளை நடத்த உத்தரவிட்டு வருகின்றனர். 

       அந்த வகையில் ஏற்கனவே கோவை மாவட்டத்தில் உள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் முதல் திருப்புதல் தேர்வை பள்ளி அளவில் நடத்த கோயம்புத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆணையிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்-லைன் வழியில் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு தேர்வை நடத்த உத்தரவிட்டுள்ளார். 


     மேலும் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தின் பாடத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு நடக்கவிருந்த முதல் திருப்புதல் தேர்வினை ஆன்லைன் வழியில் நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செயல்முறையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது. 

       காஞ்சிபுரம் மாவட்டம், பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் எழுதவுள்ள மாணக்கர்களுக்கு பொது தேர்வுக்கான ஆயத்தப்படுத்தும்விதமாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான நடத்தப்படவுள்ள தேர்வுகளுக்காக தேர்வு அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. கீழ்வரும் தேர்விற்கான வழிமுறைகளை பின்பற்றி, மாணாக்கர்கள் வீட்டிலிருந்தபடியே தேர்வினை எழுதிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தேர்வு வழிமுறைகள்

  • தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்றி இணையதள வகுப்புகள் மற்றும் தேர்வுகளில் மாணவர்கள் கலந்துகொள்வதை தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.
  • மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்த ஆயத்த பயிற்சி மேற்கொண்டு மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.
  • 11, 12ம் வகுப்பிற்கான தேர்வுகள் நேரம் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை, 10 -ஆம் வகுப்பிற்கான தேர்விற்கான காலம் 10.00 மணி முதல் 12.30 மணி வரை. 
  • ஒவ்வொரு தேர்விற்கான வினாத்தாட்களை இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தேர்வு நாளன்று அனுப்பி வைக்கப்படும்.
  • ஒவ்வொரு பாடத்திற்குமான வினாத்தாட்கள் பள்ளியிலிருந்து மாணவர்களின் Whats app Group களுக்கு காலை 9.55க்கு அனுப்புதல் வேண்டும்.
  • மாணவர்களுக்கு தனியாகவும், மாணவியர்களுக்கு தனியாகவும் Whatsapp Group உருவாக்கப்படுதல் வேண்டும். இக்குழுவில் தலைமையாசிரியர் இடம்பெறுதல் வேண்டும்.
  • மாணவர்களை மடிக்கணினிகள் / கைப்பேசி மூலம் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து
  • தனித்தாளில் அவர்களது வீட்டிலேயே பெற்றோர் முன்னிலையில் விடைகளை எழுத வேண்டும். விடைத்தாளில் முதல் பக்கத்தில் மாணவர் பெயர், பாடம் மற்றும் நாள் ஆகிய விவரங்கள்
  • எழுதப்படுதல் வேண்டும். அனைத்து விடைகளையும் எழுதிய பின்பு இறுதியில் மாணவர் கையொப்பம் மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் கையொப்பம் பெறுதல் வேண்டும்.
  • எழுதப்பட்ட விடைத்தாட்களை செல்போனில் படம் எடுத்து Whatsapp மூலமாக பாட ஆசிரியர்களுக்கு அனுப்பலாம் அல்லது பெற்றோர்கள் மூலம் பள்ளியில் விடைத்தாள்களை சமர்பிக்கலாம்.  
  • Whatsapp வசதி இல்லாத மாணவர்கள் அருகில் உள்ள மாணவர்களை அணுகி வினாக்களை பெற்று விடை அளிப்பதை உறுதி செய்தல் வேண்டும்.

     தற்பொழுது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் நடத்தப்படும் தேர்வு மாவட்டம் மற்றும் பள்ளி அளவிலான தேர்வு மட்டுமே, இந்த தேர்வுகள் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் தேர்வுகள் துறையால் வெளியிடப்பட்ட முதல் திருப்புதல் தேர்வு கருதப்படமாட்டாது. ஏனென்றால் முதல் திருப்புதல் தேர்வு மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வு பொதுத்தேர்வை போல மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் தேர்வு நடைபெறும்.


       ஆசிரியர்கள் , தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக , எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvikadal.in@gmail.com என்ற Email முகவரிக்கோ அல்லது (Whatsapp , Telegram & Signal) 9385336929 என்ற எண்ணுக்கோ அனுப்பலாம். நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் அனுப்பலாம் . நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள் உங்களின் பெயருடன் பதிவேற்றம் செய்யப்படும் .

Post a Comment

0 Comments