பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் : பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்


Please Send Your Materials , Guides and Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும். 


      அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரம் பற்றிய செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் பொதுத்தேர்வு எப்போது நடைபெறும் என்று கேள்வி எழுப்பினார் ? அதற்கு பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும் ! பொதுத்தேர்வு ஏப்ரல் மாத இறுதியிலோ அல்லது மே மாதம் முதல் வாரத்திலோ கட்டாயம் நடைபெறும் என்று தெரிவித்தார்

     10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழுமையான கவனத்தை செலுத்தி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பாடத்திட்டங்களை முடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இருப்பினும் மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டதால் பத்து நாட்கள் கழிந்தது பின்னர், பொங்கல் விடுமுறைக்கு பிறகு திருப்புதல் தேர்வை நடத்தலாம் என்று அறிவித்து இருந்தோம் ஆனால் கொரோனா அதிகரித்ததன் காரணமாக ஊரடங்கில் 20 நாட்களுக்கு மேல் சென்று விட்டதால் அவர்களுக்கு பாட திட்டங்களை விரைவாக முடிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் ஆலோசித்ததாக கூறினார். 


     மாணவர்களுக்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் அவர்களுக்கு ஏற்கனவே கடத்தப்பட்ட பாடத்திட்டங்களை ஒருமுறை நினைவு கூறி பிறகு ஏதேனும் ஒரு பொதுத்தேர்வை நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தார். 

தமிழகத்தில் பள்ளிகள் வருகின்ற பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்படுமா ?

     மேலும் ஜனவரி 31ஆம் தேதி தற்போது நடைமுறையிலிருக்கும் ஊரடங்கு நிறைவடைகிறது இதனையொட்டி பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப் படுமா என்ற கேள்வியை செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இது குறித்து அறிவிப்பு முதலமைச்சரே வெளியிடுவார், அன்றைய சூழ்நிலையில் கொரோனா பரவல் எப்படி உள்ளது மருத்துவர்களின் கருத்து, சுகாதாரத் துறையினர் இன் கருத்து என்ன இது போன்ற அனைத்தையும் ஆய்வு செய்தே மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது பற்றி முடிவு எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் ஒரு சில மாநிலங்களில் இன்று 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.



    ஆசிரியர்கள் , தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக , எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvikadal.in@gmail.com என்ற Email முகவரிக்கோ அல்லது (Whatsapp , Telegram & Signal) 9385336929 என்ற எண்ணுக்கோ அனுப்பலாம். நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் அனுப்பலாம் . நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள் உங்களின் பெயருடன் பதிவேற்றம் செய்யப்படும் .

Post a Comment

0 Comments