10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஆன்லைன் வகுப்பு தொடரும் !
தனியார் பள்ளிகளை பொறுத்தவரை ஆன்லைனிலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் நடைபெறும்.
ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 10 , 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும், அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சியில் பாடங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்த விடுமுறை நாட்களில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த முயற்சிகள் எடுக்கப் படுகின்றது.
மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஜனவரி 19ஆம் தேதி முதல் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.
ஆசிரியர்கள் வரும் 19ம் தேதி முதல் வழக்கம் போல் பள்ளிகளுக்கு வருகை தர வேண்டும். ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடரும், அலுவல் சார்ந்த பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும் : பள்ளிக்கல்வித் துறை விளக்கம்.
0 Comments