திருவண்ணாமலை கல்வி மாவட்ட அனைத்து வகை அரசு / நிதியுதவி / மெட்ரிக் / சிபிஎஸ்சி / ஐசிஎஸ்சி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஆண்டுதோரும் மார்கழி மாதத்தில் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டிகள் பள்ளி மாணவ/மாணவியர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இவ்வாண்டு நடைபெறவுள்ள திருப்பாவை மற்றும் திருவெம்பாவை போட்டிகளை கொரோனா (கோவிட்-19) பெருந்தொற்று காரணமாக, அரசின் நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி (SOP) இணையவழி மூலம் நடத்திட கோரப்பட்டுள்ளது.
ஒவ்வொரு போட்டியிலும் தகுதிபெறும் முதல் மூன்று மாணவ/மாணவிகளுக்கு முறையே பரிசுத் தொகையாக ரூ3,000/-, ரூ.2,000/- மற்றும் ரூ.1,000/-மும், சான்றுகளும் வழங்கப்பட உள்ளது.
எனவே, விருப்பமுள்ள 6 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்கள் கீழ்க்கண்ட போட்டிகளில் பங்கேற்கும் வகையில் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்கள் விவரங்களை
Registration Form Link : https://forms.gle/38zTy7DhZ2toNQU2A
இணைப்பில் காணும் கூகுள் Link-ற்குள் , சென்று பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
போட்டிகள் நடைபெறும் நாளான 12.01.2021 காலை 10.30 மணிக்கு மாணவர்கள் கீழ்க்காணும் இணைப்பை பயன்படுத்தி கீழ்க்கண்ட நான்கு தலைப்புகளில் ஏதேனும் ஒரு போட்டியில் பங்கேற்க அறிவிக்கப்படுகிறது.
ZOOM செயலி கூட்ட இணைப்பு : https://us04web.zoom.us/j/7168240252?pwd=Umsyc2pva0ZwU2NMWXpwQ1dZRUJudz09
Meeting ID : 7168240252
PW : xVe7BH
அ) திருப்பாவை பண்ணொடு பாடுதல்
ஆ) திருப்பாவை பொருள் விளக்கத்துடன் பேசுதல்
இ) திருவெம்பாவை பண்ணொடு பாடுதல்
ஈ) திருவெம்பாவை பொருள் விளக்கத்துடன் பேசுதல்
மாவட்டக் கல்வி அலுவலர்,
திருவண்ணாமலை.
0 Comments